முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா  தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை: 80 கோடியைத் கடந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  நேற்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது.  நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 97.68 சதவீதமாக உள்ளது.  தொடர்ந்து 84 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,32,158 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.99 சதவீதம் ஆகும்.  கடந்த 24 மணி நேரத்தில் 15,59,895 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 55,23,40,168 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  வாராந்திர தொற்று உறுதி விகிதம் தொடர்ந்து 86 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.04 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.97 சதவீதமாகவும் நேற்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 103 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து