முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஐந்து முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கலை மற்றும் கலாச்சாரத்துறை கமிஷனராக இருந்த கலையரசி ஐ.ஏ.எஸ்., தற்போது அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறைக்கான சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு துணை கலெக்டர் பிரதிக் தயாள் ஐ.ஏ.எஸ்., அரசு நிதித்துறை இணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு நீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் கூடுதல் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் துணை வட்டாட்சியராக இருந்த மதுபாலன் ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணை கலெக்டராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., சென்னை பெருநகர மாநகராட்சியின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவின் சிறப்பு அலுவலராக இருக்கும் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்-க்கு அரசு சிறப்பு திட்டச் செயலாக்கத் துறையின் இணை செயலாளர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து