எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணிக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், 'அணித் தேர்வை பொறுத்தவரை யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. ஒன்றிரண்டு பேரை வெளியேற்ற வேண்டி இருக்கும். அவர்களிடம் பேசும் போது சோகமும், ஏமாற்றமும் தெரியும். தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் 20 ஓவர் போட்டி அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜெய்வாலுக்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களை சேர்க்காதது நியாயமற்ற முடிவு.
குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். 'ஷாட்பிட்ச்' பந்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினையை சரி செய்தார். ஐ.பி.எல்.-ல் ரபடா, பும்ரா போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி வந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பிரமாதமாக பேட்டிங் செய்தார். அதில் நமக்கு கோப்பையை வென்று தந்தார். சுப்மன் கில் போன்று ஷ்ரேயாஸ் அய்யரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். அவரை மட்டும் விட்டது ஏன், அவர் என்ன தவறு செய்தார்?' என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் 17 ஆட்டங்களில் ஆடி 6 அரைசதம் உள்பட 604 ரன்னும், சாம்பியன்ஸ் கோப்பையில் 5 ஆட்டங்களில் ஆடி 243 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


