எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று மதுரை, பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அங்கு திரண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது.,
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே திரண்டுள்ள அனைவரது கருத்துக்களையும் கேட்கின்ற அடிப்படையில் பெண்கள் 3 பேர், ஆண்கள் 3 பேர் பேசி உள்ளீர்கள். இங்கே பேசிய அனைவரும் முதல்வர் பங்கேற்றுள்ள கிராமசபை கூட்டத்தால் பெருமை அடைகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம் என்று பேசினீர்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்களை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படிப்பட்ட மகிழ்ச்சியை, பெருமையை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பின் மூலம் பெற்றுள்ளேன்.
இந்த கூட்டத்தின் தலைப்பு கிராமசபை. கிராமசபை கூட்டங்களை ஆண்டுக்கு 2, 3 தடவை நடத்த வேண்டும் என்ற மரபை வைத்து பின்பற்றி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் முறைப்படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இன்று (நேற்று) காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் உங்களோடு நான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாட்டையே கிராம ராஜ்ஜியமாக மாற்ற விரும்பினார் மகாத்மா காந்தி. உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது என்று சொன்னவர் காந்தி அவர்கள். அத்தகைய கிராமங்கள் நிறைந்த மதுரை மண்ணை மறக்க முடியாது. தென்அப்பிரிக்காவில் கோட் சூட் அணிந்து வழக்கறிஞராக பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள் மதுரை மண்ணில் கால் பதித்த பின்னர் அரை ஆடை அணிந்த அண்ணலாக மாறினார்.
மதுரை பகுதியின் கிராமங்கள் வழியாக காந்தி அவர்கள் பயணம் செய்தபோது கிராம மக்களை வயலில் வேலை செய்து கொண்டிருந்த அழுக்கான உடை அணிந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது எதற்காக அழுக்கான துணியுடன் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது கிராம மக்கள் காந்தியை பார்த்து, அய்யா ஒரு வேட்டிதான் இருக்கிறது. அதை துவைப்பதற்கு சோப்பு வாங்குவதற்குகூட காசு இல்லை. மாற்று துணி இல்லாததால் அழுக்கான ஆடையை அணிந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
கிராம மக்களின் இந்த கருத்துதான் காந்தியின் மனதை மாற்றியது. நாட்டில் ஏழைகள் மாற்று துணிக்குகூட வழியில்லாமல் இருக்கும்போது நமக்கு எதற்கு ஆடம்பர உடை எதற்கு என்று நினைத்தார். உடனே தனது கோட் சூட்டை கழற்றி விட்டு அரை ஆடைக்கு மாறினார். காந்தியை அரை ஆடைக்கு மாற்றி பெருமைப் படைத்தது மதுரை மண்.
எனவே கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடுவதில் பெருமை அடைகிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னேன். இது உங்கள் ஆட்சி, உங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி, உங்களுக்கான ஆட்சி. கடந்த 4 மாத தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த கிராமசபை கூட்டங்கள் நடந்து வருகிறது. நான் முதல்வர் என்ற முறையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அதில் கிடைக்காத மகிழ்ச்சி இந்த கிராமசபை கூட்டத்தில் கிடைத்துள்ளது. இது மறக்க முடியாத நிகழ்வாகும்.
கடந்த 2006-ம் ஆண்டு பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. அந்த வரலாற்று நிகழ்வை இங்கே பேசிய நீங்கள் சுட்டி காட்டினீர்கள். பாப்பாபட்டி மட்டுல்ல கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகெச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது. ஜனநாயகத்தை முறைப்படுத்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர்கள் நாங்கள்.
2006-ம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்தார். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு சந்தித்து பேசினோம். நீங்களும் ஒத்துழைத்தீர்கள். அதன் பிறகு தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் கலைஞர் பாப்பாபட்டியில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து வரும்படி எங்களுக்கு உத்தரவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றவர்களுடன் சென்னைக்கு சென்றோம்.
அவர்களை பாராட்டிய முதல்வர் கலைஞர் அவரது தலைமையில் ‘சமத்துவ பெருவிழா’ என்ற பெயரில் விழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களை கவுரவித்தார். அந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சமத்துவ திருவிழா கண்ட கலைஞர் என பட்டம் கொடுத்து பாராட்டினார். அதோடு நாங்கள் நிற்கவில்லை. இந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு அன்றைய அரசின் சார்பில் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அதை வைத்து ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ் நாட்டில் எத்தனையோ ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்ற போதிலும் நான் இங்கு வந்ததற்கு காரணம் இது தான். சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை. கிராமங்களில் இருந்து தான் ஜனநாயகம் வளர்ந்தது. பண்டைய காலங்களில் ஊராட்சியில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் ஒரு குடத்தில் போடப்படும். அதனை குலுக்கி குடத்திற்குள் கையை விட்டு பெயர் சீட்டை எடுப்பார்கள். அதற்கு குடவோலை முறை என பெயர். அது தான் இன்று ஓட்டு சீட்டு முறையாக மாறியுள்ளது.
கிராம ராஜ்ஜியம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் என துண்டு சீட்டில் அறிவிக்கவில்லை. நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, சாமானியர்கள் ஆட்சி.
இந்தியாவிலேயே உழவர்களின் கருத்துக்களை கேட்டு வேளாண்மைத் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது தி.மு.க. தான். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு. ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம், வட-தென் மாவட்டம் என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகம் அமைய பாடுபட்டு வருகிறோம். இங்கு பேசிய பலரும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அந்தப் பகுதிகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரும் வழியில் கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.
பின்னர் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான நேற்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வந்தார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்