எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று மதுரை, பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் அங்கு திரண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது.,
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே திரண்டுள்ள அனைவரது கருத்துக்களையும் கேட்கின்ற அடிப்படையில் பெண்கள் 3 பேர், ஆண்கள் 3 பேர் பேசி உள்ளீர்கள். இங்கே பேசிய அனைவரும் முதல்வர் பங்கேற்றுள்ள கிராமசபை கூட்டத்தால் பெருமை அடைகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம் என்று பேசினீர்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்களை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. அப்படிப்பட்ட மகிழ்ச்சியை, பெருமையை உங்களை சந்திக்கின்ற வாய்ப்பின் மூலம் பெற்றுள்ளேன்.
இந்த கூட்டத்தின் தலைப்பு கிராமசபை. கிராமசபை கூட்டங்களை ஆண்டுக்கு 2, 3 தடவை நடத்த வேண்டும் என்ற மரபை வைத்து பின்பற்றி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் முறைப்படி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இன்று (நேற்று) காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் உங்களோடு நான் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாட்டையே கிராம ராஜ்ஜியமாக மாற்ற விரும்பினார் மகாத்மா காந்தி. உண்மையான இந்தியா கிராமங்களில் இருந்து உருவாகிறது என்று சொன்னவர் காந்தி அவர்கள். அத்தகைய கிராமங்கள் நிறைந்த மதுரை மண்ணை மறக்க முடியாது. தென்அப்பிரிக்காவில் கோட் சூட் அணிந்து வழக்கறிஞராக பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள் மதுரை மண்ணில் கால் பதித்த பின்னர் அரை ஆடை அணிந்த அண்ணலாக மாறினார்.
மதுரை பகுதியின் கிராமங்கள் வழியாக காந்தி அவர்கள் பயணம் செய்தபோது கிராம மக்களை வயலில் வேலை செய்து கொண்டிருந்த அழுக்கான உடை அணிந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது எதற்காக அழுக்கான துணியுடன் வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது கிராம மக்கள் காந்தியை பார்த்து, அய்யா ஒரு வேட்டிதான் இருக்கிறது. அதை துவைப்பதற்கு சோப்பு வாங்குவதற்குகூட காசு இல்லை. மாற்று துணி இல்லாததால் அழுக்கான ஆடையை அணிந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
கிராம மக்களின் இந்த கருத்துதான் காந்தியின் மனதை மாற்றியது. நாட்டில் ஏழைகள் மாற்று துணிக்குகூட வழியில்லாமல் இருக்கும்போது நமக்கு எதற்கு ஆடம்பர உடை எதற்கு என்று நினைத்தார். உடனே தனது கோட் சூட்டை கழற்றி விட்டு அரை ஆடைக்கு மாறினார். காந்தியை அரை ஆடைக்கு மாற்றி பெருமைப் படைத்தது மதுரை மண்.
எனவே கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடுவதில் பெருமை அடைகிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னேன். இது உங்கள் ஆட்சி, உங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி, உங்களுக்கான ஆட்சி. கடந்த 4 மாத தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த கிராமசபை கூட்டங்கள் நடந்து வருகிறது. நான் முதல்வர் என்ற முறையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அதில் கிடைக்காத மகிழ்ச்சி இந்த கிராமசபை கூட்டத்தில் கிடைத்துள்ளது. இது மறக்க முடியாத நிகழ்வாகும்.
கடந்த 2006-ம் ஆண்டு பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. அந்த வரலாற்று நிகழ்வை இங்கே பேசிய நீங்கள் சுட்டி காட்டினீர்கள். பாப்பாபட்டி மட்டுல்ல கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகெச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது. ஜனநாயகத்தை முறைப்படுத்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் எப்போதுமே உறுதியாக இருப்பவர்கள் நாங்கள்.
2006-ம் ஆண்டு முதல்வராக கலைஞர் இருந்தார். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு சந்தித்து பேசினோம். நீங்களும் ஒத்துழைத்தீர்கள். அதன் பிறகு தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்றைய முதல்வர் கலைஞர் பாப்பாபட்டியில் வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து வரும்படி எங்களுக்கு உத்தரவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றவர்களுடன் சென்னைக்கு சென்றோம்.
அவர்களை பாராட்டிய முதல்வர் கலைஞர் அவரது தலைமையில் ‘சமத்துவ பெருவிழா’ என்ற பெயரில் விழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களை கவுரவித்தார். அந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சமத்துவ திருவிழா கண்ட கலைஞர் என பட்டம் கொடுத்து பாராட்டினார். அதோடு நாங்கள் நிற்கவில்லை. இந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு அன்றைய அரசின் சார்பில் ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அதை வைத்து ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ் நாட்டில் எத்தனையோ ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்ற போதிலும் நான் இங்கு வந்ததற்கு காரணம் இது தான். சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை. கிராமங்களில் இருந்து தான் ஜனநாயகம் வளர்ந்தது. பண்டைய காலங்களில் ஊராட்சியில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் ஒரு குடத்தில் போடப்படும். அதனை குலுக்கி குடத்திற்குள் கையை விட்டு பெயர் சீட்டை எடுப்பார்கள். அதற்கு குடவோலை முறை என பெயர். அது தான் இன்று ஓட்டு சீட்டு முறையாக மாறியுள்ளது.
கிராம ராஜ்ஜியம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் என துண்டு சீட்டில் அறிவிக்கவில்லை. நாங்கள் கூறிய 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இதில் நாங்கள் சொன்னதும் உள்ளது. சொல்லாததும் உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம். இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, சாமானியர்கள் ஆட்சி.
இந்தியாவிலேயே உழவர்களின் கருத்துக்களை கேட்டு வேளாண்மைத் துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தது தி.மு.க. தான். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு. ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம், வட-தென் மாவட்டம் என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழகம் அமைய பாடுபட்டு வருகிறோம். இங்கு பேசிய பலரும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அந்தப் பகுதிகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல் உள்ளிட்ட சில திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிராம மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரும் வழியில் கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டு கடன் உதவிகள் வழங்கினார்.
பின்னர் மதுரை வந்த மு.க.ஸ்டாலின் மேலமாசி வீதியில் உள்ள மகாத்மா காந்தி மேலாடையை துறந்த இடத்துக்கு சென்றார். அங்கு காந்தி ஜெயந்தி தினமான நேற்று காந்தியடிகள் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். மேலும் கதர் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் வந்தார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.