முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதா இல்லத்தை மீட்க அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலத்தில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அம்மா உணவகத்தை முடக்க தி.மு.க. அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு தி.மு.க.விக்கு தகுதி இல்லை. நான் முதல்வராக  இருந்தபோது, அமைச்சரவை கூட்டப்பட்டு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். அந்த கோப்பு நிலுவையில் உள்ளது.  இந்த பிரச்சினையில் இப்போது தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. இப்போது அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் நாடகமாடி கொண்டிருக்கிறார். 

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொண்டர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. இன்று 1-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு செய்ய முடிவு எடுப்போம். எனவே நிச்சயமாக ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை மீட்டெடுப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து