முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று  ஜி.கே.வாசன் வலியுறுத்தி  உள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து மத்தியக்குழு கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஆய்வு செய்தது. மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழு இரண்டு குழுக்களாக பிரிந்து 11 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்தது.  இந்த குழு மேற்கொண்ட ஆய்வுகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து பேரிடம் நிதி ஒதுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய குழு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு டெல்லி திரும்பிய சில நாட்களில் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜி.கே. வாசன் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை மூலம் மத்திய அரசுக்கு அவர் வலியுறுத்தினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து