Idhayam Matrimony

நிறம் சேர்த்த குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் உணவாக குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளன. நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளன.  தரமற்ற, நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்டவற்றை உண்பதால், உடல் உபாதைகள் ஏற்படும்.  வயிற்றுப் புண், நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக்குறைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

தரமற்ற குடல் அப்பளம், வடகம், வத்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.  தரமற்ற குடல் அப்பளத்தில் Carmoisine, Tartrazine, Sunset yellow, Ponceau 4R உள்ளிட்ட பல நிறமிகள்(Dyes) சேர்க்கப்பட்டுள்ளன. தரம் பற்றிய குறைபாடு குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து