எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதோடு மட்டும் அல்லாமல், மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகவும் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது., மாநில அரசின் நிதியில் இருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.
மத்திய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது இது போன்ற நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்கு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக் கூடிய பள்ளி கல்வியால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி பள்ளி கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும். இந்த நீட் தேர்வு மாணவர்களின் கல்வி கனவை சிதைப்பதாக மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது.
ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டவும் நம் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்ட முன்வடிவை மாநில கவர்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றது அல்ல என்று கருதப்படுகிறது.
தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்வரே நேரில் சென்று கவர்னரை சந்தித்து நீட் சட்ட முன்மொழிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். மேலும் இது தொடர்பாக கடந்த 28.12.2021 அன்று தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசு தலைவர் அலுவலகத்தில் சந்திக்க சென்ற நேரத்தில் அவரை சந்திக்க இயலவில்லை என்பதால் மனுவை அவரது அலுவலகத்தில் அளித்து அன்று மாலையே அம்மனுவும் மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மேலும் வலியுறுத்திட மத்திய உள்துறை மந்திரியை சந்திக்க நேரம் கோரி பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால் அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மத்திய உள்துறை மந்திரி மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து இன்றைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை மந்திரியிடம் நாம் ஏற்கனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடம் இருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல் சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும் மாநில சுயாட்சி தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும் நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது என்பது தி.மு.க. மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களின் விருப்பம். தமிழக மக்களின் விருப்பம் என்பதை கடந்து தமிழக முதல்வர் மத்திய அரசின் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க அனுப்பினார்கள். நாங்கள் அவரிடம் போய் நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய போது அவரே சொன்னது, “தமிழகம் மட்டுமல்ல நான் சார்ந்திருக்கும் ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை மக்களிடத்தில் மிகுந்து இருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை என்கிற கருத்து மற்ற மாநிலங்களிலும் மேலோங்கி இருக்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் அரசியல் இருக்கிறது” என்று நேரடியாக ஒப்புக் கொண்டார்.
இது தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு உணர்வு அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த எதிர்ப்பு என்பது எல்லோர் இடத்திலும் இருக்கிறது. ஜனநாயக ரீதியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்தையும் கேட்டு பெறுவது என்பது உகந்தது என்ற காரணத்தால் பா.ஜனதாவும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டது. பா.ஜனதாவில் இருந்து வந்தவர்கள் அவர்களின் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஜனநாயக ரீதியாக அந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் உள்துறை மந்திரியை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. கவர்னரை கூட அனைத்துக் கட்சி தலைவர்கள் போய் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று தீர்மானத்துக்கு முழு ஆதரவை தெரிவித்து இருக்கிறார். அவர்தான் மீண்டும் ஒருமுறை உள்துறை மந்திரியை சந்திக்கலாம் என்கிற கருத்தை சொன்னார். இதை முதல்வர் ஏற்றுக் கொண்டு மீண்டும் சந்திப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறினார்.
சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து பிறகு மீண்டும் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் பேசி அடுத்த கட்ட போராட்டத்துக்கு மற்றவர்களை முன்னெடுத்து செல்வோம். மத்திய அரசு 15 சதவீத மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை நாளை தொடங்க உள்ளது. 15 நாளில் கவுன்சிலிங் முடிந்த தும் உடனே மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டதும் இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கை இங்கு தொடங்கி விடுவோம். அதில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற