எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய தொழில்கள் உருவாக அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று சென்னையில் நடந்த இஸ்பாகான் அமைப்பின் தொழில் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை, பழவந்தாங்கலில் நடைபெற்ற இஸ்பாகான் அமைப்பின் 14-வது மாநாட்டினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
இந்த இஸ்பாகான் 2022 ஆண்டு விழா, இந்த ஆண்டு சென்னையில் நடப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மை அடைந்த ஒரு மாநிலம். தமிழ்நாட்டில் அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அத்தகைய இளைய அறிவு சக்தியை உருவாக்கக் கூடிய அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம்.
இந்தியாவில் இருக்கும் மிகமுக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தை சார்ந்தவை என்று அண்மைக்கால புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. தமிழ்நாடு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவின் அடிப்படைகளில் தேவையான தகுதிகளுடன் முன்னிலையில் உள்ள மாநிலம்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் காப்பகங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்தவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தொழில் பூங்காக்களையும் உருவாக்குதற்குமான செயல்திட்டங்கள் வகுக்கப்படடுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டுமே ஏறத்தாழ 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 60 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உயர் வருவாய் உள்ள தனிநபர் முதலீட்டாளர்கள் சென்னையில் மட்டுமல்லாது, மாநிலத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தன்னார்வ அமைப்பாக உருவாகி சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறோம்.
வரும் நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாக உருவெடுக்கும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் நான்காம் தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. தானியங்கி வாகனங்கள், தொலைவழி மருத்துவம், முப்பரிமாண அச்சு, மரபணுப் புரட்சி, மெய்நிகர் நுட்பங்கள் என தொழில்நுட்பவியல் விரிந்து பரவி விட்டது. பெருந்தொற்றுச் சூழலில், தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறிப்போயிருக்கிறது. இத்தகைய புதிய சூழலில் இயங்க உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரிய நிறுவனங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம். புதிய புத்தாக்கத் தொழில்களில் இறங்கிப் பார்க்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டதாக இந்த அரசு இருக்கிறது.
புதுயுக சிந்தனைகளுடன் சுதந்தரமாக இயங்கும் புத்தொழில்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. பல களங்களில் நமது இளைஞர்கள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பங்கள் மூலமாக உருவாக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தச் சாதனையோடு நாம் அமைதியாகிவிடக் கூடாது. அடுத்த சாதனைக்குத் தயாராக வேண்டும்.
புதிய தொழில் திறனாளர்கள் உருவாக வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாகி அவர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றாக வேண்டும். இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலிருந்தும் வரவேண்டும். வளர்ச்சிக்கு அடையாளமான, அதே வளர்ச்சிக்கு அடிப்படையான முதன்மை முதலீடு மனிதவள முதலீடே. தொழில்முனைவோர்களும் தொழில்திறனாளர்களுமே இந்தச் சூழலை உருவாக்குகிறார்கள். எண்ணங்களே ஏற்றத்தை உருவாக்குகின்றன, மனிதர்களே மாற்றத்தை உருவாக்குகிறார்கள். புதிய நூற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், புத்தாக்கத்தின் வழியாக புதிய தொழில்கள் உருவாக்கவும், இந்த அரசு நிச்சயமாக துணைநிற்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.