தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய தொழில்கள் உருவாக அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று சென்னையில் நடந்த இஸ்பாகான் அமைப்பின் தொழில் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை, பழவந்தாங்கலில் நடைபெற்ற இஸ்பாகான் அமைப்பின் 14-வது மாநாட்டினை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
இந்த இஸ்பாகான் 2022 ஆண்டு விழா, இந்த ஆண்டு சென்னையில் நடப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மை அடைந்த ஒரு மாநிலம். தமிழ்நாட்டில் அறிவு சக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அத்தகைய இளைய அறிவு சக்தியை உருவாக்கக் கூடிய அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம்.
இந்தியாவில் இருக்கும் மிகமுக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தை சார்ந்தவை என்று அண்மைக்கால புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. தமிழ்நாடு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்முனைவின் அடிப்படைகளில் தேவையான தகுதிகளுடன் முன்னிலையில் உள்ள மாநிலம்.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக உயர்த்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாட்டில் இயங்கும் புத்தொழில் காப்பகங்களை உலகத்தரத்துக்கு மேம்படுத்தவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள் மற்றும் புத்தொழில் பூங்காக்களையும் உருவாக்குதற்குமான செயல்திட்டங்கள் வகுக்கப்படடுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டுமே ஏறத்தாழ 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் 60 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உயர் வருவாய் உள்ள தனிநபர் முதலீட்டாளர்கள் சென்னையில் மட்டுமல்லாது, மாநிலத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தன்னார்வ அமைப்பாக உருவாகி சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறோம்.
வரும் நாட்களில் தமிழ்நாடு புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாக உருவெடுக்கும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் நான்காம் தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. தானியங்கி வாகனங்கள், தொலைவழி மருத்துவம், முப்பரிமாண அச்சு, மரபணுப் புரட்சி, மெய்நிகர் நுட்பங்கள் என தொழில்நுட்பவியல் விரிந்து பரவி விட்டது. பெருந்தொற்றுச் சூழலில், தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறிப்போயிருக்கிறது. இத்தகைய புதிய சூழலில் இயங்க உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரிய நிறுவனங்களை வரவேற்கிறோம். அதேநேரத்தில் சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம். புதிய புத்தாக்கத் தொழில்களில் இறங்கிப் பார்க்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டதாக இந்த அரசு இருக்கிறது.
புதுயுக சிந்தனைகளுடன் சுதந்தரமாக இயங்கும் புத்தொழில்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. பல களங்களில் நமது இளைஞர்கள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பங்கள் மூலமாக உருவாக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தச் சாதனையோடு நாம் அமைதியாகிவிடக் கூடாது. அடுத்த சாதனைக்குத் தயாராக வேண்டும்.
புதிய தொழில் திறனாளர்கள் உருவாக வேண்டும். புதிய தொழில் முனைவோர் உருவாகி அவர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றாக வேண்டும். இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலிருந்தும் வரவேண்டும். வளர்ச்சிக்கு அடையாளமான, அதே வளர்ச்சிக்கு அடிப்படையான முதன்மை முதலீடு மனிதவள முதலீடே. தொழில்முனைவோர்களும் தொழில்திறனாளர்களுமே இந்தச் சூழலை உருவாக்குகிறார்கள். எண்ணங்களே ஏற்றத்தை உருவாக்குகின்றன, மனிதர்களே மாற்றத்தை உருவாக்குகிறார்கள். புதிய நூற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், புத்தாக்கத்தின் வழியாக புதிய தொழில்கள் உருவாக்கவும், இந்த அரசு நிச்சயமாக துணைநிற்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்
24 May 2022கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
-
கஞ்சா விற்பனை செய்தால்சொத்துக்கள் முடக்கப்படும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை
24 May 2022சென்னை : சென்னை ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்றார்.
-
தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை உள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
24 May 2022சென்னை : தி.மு.க அரசை பற்றி பேசினாலே ஜெயில்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலைகளை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும்: அண்ணாமலை
24 May 2022சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
24 May 2022சென்னை : ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
-
பினராய் விஜயனுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
24 May 2022சென்னை : பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ
-
கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மெத்தனம் கூடாது : அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்
24 May 2022சென்னை : ”கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடாது” என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
24 May 2022சென்னை : வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை
24 May 2022வேலூர் : சிறையில் இருந்து வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கில் இருந்து முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு
24 May 2022சென்னை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிக்கவிருக்கிற
-
ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
24 May 2022டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
-
மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது : சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 May 2022ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிற
-
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
24 May 2022சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் இருக்கக்கூடாது : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
24 May 2022மதுரை : கோவில் திருவிழாக்களில் நிபந்தனைகளை மீறி ஆபாசமாக வார்த்தைகள், ஆபாசமான நடனங்களும் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை தொடரலாம் என்று ம
-
போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன் மட்டுமே பேச தயார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
24 May 2022டாவோஸ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினுடன் மட்டுமே பேச தயாராக இருக்கிறேன் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசிய ஜப்பானிய சிறுவன்
24 May 2022டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
-
6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு
24 May 2022சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தா
-
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கான பிரத்யேக சிகிச்சை வார்டு தயார்: டீன் தகவல்
24 May 2022மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கென பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்தார்.
-
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்
24 May 2022லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 24-05-2022
24 May 2022 -
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
24 May 2022கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
24 May 2022சென்னை : துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
24 May 2022சேலம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
-
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை: அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு உத்தரவு : மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை
24 May 2022சென்னை : தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அறிகுறிகள் உள்ளவர்களை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் சுற்றறிக்கை மூ
-
மக்கள் அச்சப்பட தேவையில்லை: குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் தீவிர கண்காணிப்பு : அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
24 May 2022கன்னியாகுமரி : மக்கள் அச்சப்பட தேவையில்லை.