முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் கனமழையால் நிரம்பி வழியும் அணை உடையும் அபாயம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

 பிரேசில் நாட்டில் உள்ள மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் கனமழையால் நிரம்பி வழியும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பிரேசில் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாகாணத்தின் தென்கிழக்கில் உள்ள பாராஜிமினாஸ் நகர் அருகே உள்ள காரியோகா என்ற அணை நிரம்பி வழிந்து வருகிறது. கனமழை மேலும் ஒருவாரத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இந்த அணை உடையும் அபாயம் உருவாகியிருக்கிறது.

அணைக்கு கீழே 5 நகரங்களில் மக்கள் வசித்து வருவதால் மிகப் பெரிய உயிர்சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் அதிகரித்து வருகிறது. இந்த அணை எப்போதும் இது போன்று அபாயகரமாக நிரம்பியது இல்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அணை உடையாமல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  இந்த கனமழையால் கடந்த 8-ம் தேதி கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள பர்னாஸ் நீர்வீழ்ச்சியில் ராட்சத பாறை விழுந்து 10 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து