எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 958 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் சேவை வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 958 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் கடக்கிறது.
நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் ரயிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய 3-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,299, 2-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,970 மற்றும் முதல் ஏசி பெட்டிக்கு ரூ.3,640 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதில் ஜி.எஸ்.டி. சேர்க்கப்படவில்லை. பயணிகள் டிக்கெட் எடுக்கும் போது ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்த ரயிலில் 3-டைர் ஏசி பெட்டிகள் 11, 2-டைர் ஏசி பெட்டிகள் 4, முதல் ஏசி பெட்டி ஒன்று என மொத்தம் 16 நவீன பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


