திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புடன் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும், பொது வெளியில் காவல் துறையினரிடம் மரியாதை குறைவாக நடப்பது மிகவும் அதிகரித்துள்ளது. பல நிகழ்வுகளில் காவலர்கள் தாக்கப்படும் காட்சிகள், காவல் நிலையத்திலேயே சர்வ சாதரணமாக அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்கள், சமூக, செய்தி ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேநேரம், குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒரு சில காவலர்கள், அவர்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு காரணம் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதால் ஏற்படும் மன அழுத்தம்தான்.
அரசியல் அழுத்தம், பொது வெளியில் ஒரு சில காவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சுதந்திரமாக செயல்பட முடியாத நிலைமை, உயர் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாக முடிவு காணுங்கள் என்று தனக்குக் கீழ் உள்ள காவலர்களுக்கு அழுத்தம் தருதல் போன்றவற்றால் பாதிக்கப்படும் காவலர்கள், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தங்களது வெறுப்பைக் காட்டும் நிலைமை ஏற்படுவதாக உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
8.1.2022 அன்று சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையக் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், பிறகு 11-ஆம் தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்ததாகவும், 12-ஆம் தேதி காலை மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த அரசின் தவறினால் தனது இன்னுயிரை இழந்த திருத்தணி குப்புசாமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன். மேலும் தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 20-05-2022
20 May 2022 -
உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 May 2022உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.
-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
19 May 2022மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்
20 May 2022சென்னை : தி.மு.க.
-
ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
20 May 2022சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
20 May 2022அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது.
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
20 May 2022தஞ்சாவூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி : வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
20 May 2022ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதி
-
அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
20 May 2022சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி
20 May 2022சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.
-
சென்னை குடிநீர் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ்.கோரிக்கை
20 May 2022சென்னை : பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ
-
எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்
20 May 2022நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
கோவை, திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நாளை முதல் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் : லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
20 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந் தேதி (நாளை) முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் ம
-
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் தாயகம் திரும்பினர்
20 May 2022மீனம்பாக்கம் : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்.
-
மதுரை உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
20 May 2022மதுரை, ராமேஸ்வரம் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நெல்லையில் 6-வது நாளாக நீடித்த மீட்பு பணிகள்: கல்குவாரி விபத்தில் தேடப்பட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது
20 May 2022நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் : சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டி
20 May 2022சென்னை : தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
நாமக்கல்லில் 3 மையங்களில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்: அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் பணியிலிருந்து நீக்கம் : தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை
20 May 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர் பிடிப்பட்டதை தொடர்ந்து தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்
-
கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: திருச்சி உள்ளிட்ட 9 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
20 May 2022சென்னை : கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்ட கலெக்டர்கள் மு
-
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
20 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ஸ்டாலின் பாராட்டு
20 May 2022சென்னை : உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்
20 May 2022சென்னை : முதியோர்களுக்கான ரயில் கட்டணச்சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவ
-
போலி மதுவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.பி.எஸ்.
20 May 2022சென்னை : தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
-
தமிழகத்தில் இன்று குரூப்-2 தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
20 May 2022சென்னை : தமிழகத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
-
இலங்கை: ரணில் அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு
20 May 2022கொழும்பு : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.