முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன. 26-ல் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு சசிகலா கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பாக இடம்பெறக் கூடிய, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், இது தொடர்பாக மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு தின அணி வகுப்பில் நம் தமிழகத்தின் சார்பாக இடம்பெறக்கூடிய, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.  

தமிழ் மண்ணின் வரலாற்றையும், அதன் பெருமைகளையும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களைக் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், குடியரசு தின அணிவகுப்பில், தமிழக ஊர்தியை இடம்பெற செய்ய  மத்திய அரசு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து உரிய அனுமதியை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து