முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1,054 பேருக்கு தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2022      இந்தியா
India-Corona 2022 01 21

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை அதன் வீழ்ச்சிப்பாதையில் உள்ளது. தினந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இந்நிலையில் நேற்று புதிதாக 1,054 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 054 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,35,271 ஆக அதிகரித்துள்ளது.  அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,685 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,02,454 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 11,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,85,70,71,655 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,38,792 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து