எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதிய போட்டியை சந்திக் வேண்டியது வரும் என நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோழி ஒன்று முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம்.
வீடியோ தெளிவாக நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டு உள்ளது தெரிகிறது. கோழியானது கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டைய கால்களால் உருட்டி, கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுவதை வீடியோ காட்டுகிறது.கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டுகிறது.
டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி: மாதவனின் மகனுக்கு தங்கம்
இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் டேனிஷ் ஓபன் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த். இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற மூன்று பந்தயங்களிலும் அபார திறனை வெளிப்படுத்தி தனது முந்தைய சிறந்த (பெஸ்ட்) டைமிங்கை முறியடித்துள்ளார் அவர். இந்நிலையில், 800 மீட்டர் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் வேதாந்த். 08:17.28 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார் அவர். இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சி.எஸ்.கே.வை வீடியோ மூலம் கிண்டலடித்த வாசிம் ஜாபர்
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு அருகே சென்று தோல்வியடைந்தது. இந்த போட்டியை தொடந்து சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்தார். அதில், சாலையில் செல்லும் ஆண் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதாக தவறுதலாக கருதி கைகளை நீட்டுகிறார்.
ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு அருகில் உள்ள ஒருவரிடம் சென்று அணைத்துகொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாபர். இவ்வாறு தான் சென்னை அணியின் வெற்றியை குஜராத் டைடன்ஸ் திருடிக்கொண்டது என கூறியுள்ளார். வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் ஐ.பி.எல் சூதாட்டம் - 9 பேர் கைது
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரமித்ராபூர் காவல்துறை அதிகாரி மனாஸ் பிரதான் தெரிவித்துள்ளார்.
மறைந்த சகோதரி குறித்து ஹர்ஷல் உருக்கமான பதிவு
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல். இவரது சகோதரி கடந்த 9 ஆம் தேதி மறைந்தார். அதன் காரணமாக தனது குடும்பத்துடன் தன் நேரத்தை செலவிடும் விதமாக ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறினார் ஹர்ஷல் படேல். தற்போது தனது அணியினருடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரியின் பேரிழப்பை தாங்க முடியாமல் உருக்கமான பதிவின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது…
"அக்கா, நம் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் முக்கியமான நபர். கனிவான குணம் படைத்தவர். இறுதி மூச்சு வரையில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் அனைத்தையும் மாறா புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள். இந்தியாவுக்கு நான் விளையாட வருவதற்கு முன்பாக உங்களுடன் இருந்தேன். அப்போது நீங்கள் என்னை விளையாட்டில் கவனம் செலுத்தச் சொன்னீர்கள். உங்களைக் குறித்து கவலை கொள்ளவும் வேண்டாம் எனச் சொன்னீர்கள். உங்களுடைய அந்த வார்த்தைகளுக்காக தான் நான் மீண்டும் களத்திற்கு திரும்பக் காரணம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிக ரன்களை கொடுத்த சிஎஸ்கே பவுலர் ஜோர்டான்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டான் 3.5 ஓவர்கள் வீசி, 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது எனவும் சொல்லலாம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ஜோர்டானை சென்னை அணி 3.60 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது. இதே சீசனில் சென்னை அணியின் மற்றொரு பவுலரான முகேஷ் சவுத்ரி, 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை இதற்கு முன்னதாக ஒரு போட்டியில் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 22-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித



