எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதிய போட்டியை சந்திக் வேண்டியது வரும் என நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோழி ஒன்று முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம்.
வீடியோ தெளிவாக நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டு உள்ளது தெரிகிறது. கோழியானது கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டைய கால்களால் உருட்டி, கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுவதை வீடியோ காட்டுகிறது.கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டுகிறது.
டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டி: மாதவனின் மகனுக்கு தங்கம்
இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் டேனிஷ் ஓபன் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
இதே தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் வேதாந்த். இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற மூன்று பந்தயங்களிலும் அபார திறனை வெளிப்படுத்தி தனது முந்தைய சிறந்த (பெஸ்ட்) டைமிங்கை முறியடித்துள்ளார் அவர். இந்நிலையில், 800 மீட்டர் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் வேதாந்த். 08:17.28 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றுள்ளார் அவர். இதனை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சி.எஸ்.கே.வை வீடியோ மூலம் கிண்டலடித்த வாசிம் ஜாபர்
குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு அருகே சென்று தோல்வியடைந்தது. இந்த போட்டியை தொடந்து சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக வீடியோ ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பகிர்ந்தார். அதில், சாலையில் செல்லும் ஆண் தன்னை நோக்கி ஒரு பெண் வருவதாக தவறுதலாக கருதி கைகளை நீட்டுகிறார்.
ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு அருகில் உள்ள ஒருவரிடம் சென்று அணைத்துகொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜாபர். இவ்வாறு தான் சென்னை அணியின் வெற்றியை குஜராத் டைடன்ஸ் திருடிக்கொண்டது என கூறியுள்ளார். வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் ஜாபர் சி.எஸ்.கே அணியையும் கலாய்த்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் ஐ.பி.எல் சூதாட்டம் - 9 பேர் கைது
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஐபிஎல் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 19 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 9 பேரும் ஒடிசாவின் பிரமித்ராபூர் தொகுதியில் உள்ள ஜமுனானகி கிராமத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரமித்ராபூர் காவல்துறை அதிகாரி மனாஸ் பிரதான் தெரிவித்துள்ளார்.
மறைந்த சகோதரி குறித்து ஹர்ஷல் உருக்கமான பதிவு
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல். இவரது சகோதரி கடந்த 9 ஆம் தேதி மறைந்தார். அதன் காரணமாக தனது குடும்பத்துடன் தன் நேரத்தை செலவிடும் விதமாக ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறினார் ஹர்ஷல் படேல். தற்போது தனது அணியினருடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரியின் பேரிழப்பை தாங்க முடியாமல் உருக்கமான பதிவின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது…
"அக்கா, நம் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் முக்கியமான நபர். கனிவான குணம் படைத்தவர். இறுதி மூச்சு வரையில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் அனைத்தையும் மாறா புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள். இந்தியாவுக்கு நான் விளையாட வருவதற்கு முன்பாக உங்களுடன் இருந்தேன். அப்போது நீங்கள் என்னை விளையாட்டில் கவனம் செலுத்தச் சொன்னீர்கள். உங்களைக் குறித்து கவலை கொள்ளவும் வேண்டாம் எனச் சொன்னீர்கள். உங்களுடைய அந்த வார்த்தைகளுக்காக தான் நான் மீண்டும் களத்திற்கு திரும்பக் காரணம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிக ரன்களை கொடுத்த சிஎஸ்கே பவுலர் ஜோர்டான்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டான் 3.5 ஓவர்கள் வீசி, 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது எனவும் சொல்லலாம்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ஜோர்டானை சென்னை அணி 3.60 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது. இதே சீசனில் சென்னை அணியின் மற்றொரு பவுலரான முகேஷ் சவுத்ரி, 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை இதற்கு முன்னதாக ஒரு போட்டியில் விட்டுக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 22-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.