எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல், பாட்மின்டனில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 247.5 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, தென் கொரியாவின் கிம் வூ ரிம் (246.6), மற்றொரு இந்தியரான சௌரியா சைனி (224.3) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் பெற்றனர். ஸ்ரீகாந்த் எட்டியிருக்கும் புள்ளி, இறுதிச்சுற்றில் உலக சாதனையாகும்.
அதேபோல், பாட்மின்டன் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றிலும் இந்தியா 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. போட்டியின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை நிறைவில், இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்களுடன் 8-ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் 65 பேர் கொண்ட இந்திய அணி கலந்துகொண்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு இப்போட்டியில் இந்தியா தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலம் மட்டும் வென்றிருந்தது.
சீனாவில் கொரோனா பரவலால் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது. மேலும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும்: விருத்திமான்
குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா சமீபத்தில் தன்னுடைய 20 ஓவர் போட்டி ஆட்டமுறை குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " நான் குறுகிய வடிவிலான போட்டிகளுக்கான வீரர் அல்ல என்று சிலர் ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே எப்போதும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்பினேன்.
மகேந்திர சிங் டோனி, ஆண்ட்ரே ரசல் அல்லது கிறிஸ் கெய்ல் போன்றவர்களின் உடலமைப்பு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னிடம் உள்ள ஆற்றல், எனது அணுகுமுறையுடன் பவர்பிளேயை என்னால் நன்றாக பயன்படுத்த முடியும். அதை தான் நான் செய்து வருகிறேன். " என சாஹா தெரிவித்தார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3,5-7,7-6 (11,9) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று மாட்ரிட் ஓபன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .
இங்கிலாந்து அணிக்கு விரைவில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்
இங்கிலாந்தின் அணியின் நிர்வாக இயக்குநராக ராப் கீ பொறுப்பேற்ற பின்னர் நியூசிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான மெக்குல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்கள்.
மெக்கல்லம் மற்றும் கேரி கிறிஸ்டன் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களாக இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று ராபர்ட் கீ விருப்பப்படுவதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களாக டெஸ்டில் இறங்குமுகமாக இருக்கும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது. வெள்ளைப் பந்து (ஒருநாள் & டி 20) மற்றும் சிவப்புப் பந்து (டெஸ்ட்) அணிகளுக்கு தனித்தனிப் பயிற்சியாளர்களை இங்கிலாந்து நியமிப்பது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் சைமன் கடிச், இங்கிலாந்தின் கோலிங்வுட், நிக் நைட் ஆகியோரும் பயிற்சியாளர்களுக்கான பரிசீலனையில் உள்ளார்கள்.
டி - 20 பிளாஸ்ட் போட்டியில் இங்கி. வீரர் ஆர்ச்சர் பங்கேற்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்புவது பற்றி டெய்லி மெயில் ஊடகத்திடம் ஆர்ச்சர் தெரிவித்ததாவது:
பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதால் மீண்டும் விளையாட வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியுமா என்றும் சந்தேகப்பட்டேன். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு உறுதியையும் மனநிம்மதியையும் அளித்தது. நான் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றார்கள். இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை இழந்து விடுவேன் என எண்ணினேன். இப்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன். டி20 பிளாஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டும். அதில் நான் ஒழுங்காக விளையாடா விட்டால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. டி20 உலகக் கோப்பை வரப்போகிறது எனத் தெரியும். அதில் கலந்துகொண்டு நன்றாக விளையாட வேண்டும் என்றார். மே 26 அன்று டி20 பிளாஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெகுலா..!
போட்டித்தரவரிசையில் 12-ஆவது இடத்திலிருக்கும் பெகுலா காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் உள்நாட்டு வீராங்கனை சாரா சொரைப்ஸ் டோர்மோவை தோற்கடித்தார். 8-ஆம் இடத்திலிருக்கும் ஜாபியுரும் 6-3, 6-2 என ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை எளிதாக வீழ்த்தினார்.
அரையிறுதியில் பெகுலா, ஜாபியுர் முறையே சுவிட்ஸர்லாந்தின் ஜில் டெய்ச்மான், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோரை எதிர்கொள்கின்றனர். முன்னதாக டெய்ச்மான் - உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவையும், அலெக்ஸாண்ட்ரோவா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவையும் காலிறுதியில் வெளியேற்றியிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.