முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கான பிரத்யேக சிகிச்சை வார்டு தயார்: டீன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Rajaji Hospital 2022-05-24

Source: provided

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கென பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்தார். 

குரங்கு அம்மை ஆபிரிக்க நாடுகளில் பரவக்கூடியா நோய். ஆனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு என பிரத்யேக சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து