முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று- இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று உயர்வு

புதன்கிழமை, 25 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 28

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை நேற்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,675 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

கேரளாவில் 468, டெல்லியில் 418, மகாராஷ்டிராவில் 338, அரியானாவில் 230, உத்தரபிரதேசத்தில் 124, கர்நாடகாவில் 118 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192 ஆக உயர்ந்தது. கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 13 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுதவிர நேற்று முன்தினம் டெல்லியில் 2, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,507 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,977 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 2 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது. தற்போது 14,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 192 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து