Idhayam Matrimony

இந்திய - வங்காளதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் : பதிலடி தாக்குதலில் ஒருவர் பலி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
India-Bangladesh 2022-06-06

Source: provided

கொல்கத்தா : இந்திய-வங்காளதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் கடத்தல்காரர் ஒருவர் உயிரிழந்தார். 

மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லை உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம்  15-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் சட்ட விரோதமாக நுழைந்தனர். இந்த தகவல் எல்லைபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் எல்லைப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது கடத்தல் காரர்கள் ஆயுதங்களை கொண்டு தீடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் மீது பாதுகாப்பு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கடத்தல் கும்பலை சோ்ந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்த நபர் ரோஹில் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து