முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யார் வழக்கு தொடுத்தாலும் பின்வாங்க மாட்டோம் அண்ணாமலை உறுதி

வியாழக்கிழமை, 16 ஜூன் 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

தஞ்சாவூர் ; யார் வழக்கு தொடுத்தாலும் பின்வாங்க மாட்டோம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தஞ்சாவூரில் ரஜினி ரசிகர்கள் பா.ஜ.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். இந்த விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது, 

தி.மு.க. அரசு மீது பா.ஜ.க. வைத்த குற்றச்சாட்டிலிருந்து பின் வாங்காமல், இன்னும் ஒரு படி முன்னால்தான் போகிறோம். தாய், சேய் நல ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் வெளியிட்ட ஆவணத்துக்கு பதில் அளிக்க வேண்டும்.

தொழில்நுட்பக் குழு ஆவின் பெயரை பரிந்துரை செய்ததா? இல்லையா? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. என் மீது நிறைய வழக்கு தொடரப்பட்டு வருகிறது. மின்சாரத் துறை அமைச்சர் ரூ. 10 கோடிக்கு என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுவரை ரூ. 620 கோடி அளவுக்கு என் மீது தமிழகத்தில் வழக்குகள் உள்ளன. சுகாதாரத் துறை அமைச்சர் என் மீது வழக்குத் தொடுத்தாலும் பயப்பட மாட்டேன். நாங்கள் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளோம். யார் வழக்குத் தொடுத்தாலும், மிரட்டினாலும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து