முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. 

சென்னை தலைமை செயலகத்தில் மாநில அளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி தரப்பில் இன்பதுரையும், பொள்ளாட்சி ஜெயராமனும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து