முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

cகொரோனாவில் இருந்து மீண்டும் குணமடைந்தார் அதிபர் ஜோபைடன்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      உலகம்
Joe-Biden 2022 02 19

Source: provided

வாஷிங்டன் ;அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீண்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது

. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே அதிபர் ஜோபைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். 

இந்த நிலையில் கடந்த 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் ஜோபைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு நேற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து