எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியில்...
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாக இருந்தது. தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
மிகுந்த கவலையாக...
இந்த நிலையில், ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாஸ்டர்ஸ் யூனியன் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மிகுந்த கவலையாக இருந்தது. இனிமேல் கிரிக்கெட்டே விளையாட வேண்டாம் என நினைத்தேன். ஏனெனில், அந்த உலகக் கோப்பைத் தொடருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாததைப் போன்று உணர்ந்தேன்.
இழந்த ஆற்றலை...
அந்த உணர்விலிருந்து வெளிவர எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த, நேசிக்கும் கிரிக்கெட்டினை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டேன் என அடிக்கடி கூறிக் கொண்டேன். மெதுவாக இழந்த ஆற்றலை மீண்டும் பெற்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்.
மிகுந்த ஏமாற்றத்தில்...
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் அணியில் உள்ள அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தோம். இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை என்னால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அந்த தோல்வியிலிருந்து வெளிவருவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். உலகக் கோப்பை தொடருக்கு 2-3 மாதங்களுக்கு முன்பாக தயாராக ஆரம்பிக்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக தயாரானேன்.
ஓரிரு மாதங்கள்...
உலகக் கோப்பையை வெல்வதே என்னுடைய இலக்காக இருந்தது. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி. அதனால், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது என்னை முற்றிலுமாக சோகத்தில் ஆழ்த்தியது. என்னுடைய உடலில் கொஞ்சம்கூட ஆற்றல் இல்லாததாக உணர்ந்தேன். அந்த தோல்வியிலிருந்து வெளிவர எனக்கு ஓரிரு மாதங்கள் தேவைப்பட்டன.
எப்படி கையாள...
ஒரு விஷயத்தில் அதிகமாக முதலீடு செய்து, அதற்கான பலன் கிடைக்கவில்லையென்றால், மிகுந்த ஏமாற்றமடைவது இயல்பானது. மிகச் சரியாக கூறவேண்டுமென்றால், நானும் அந்த மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடாது என எனக்குத் தெரியும். தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது. மீண்டும் புத்துணர்ச்சியுடன் முதலில் இருந்து ஆரம்பித்தேன். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினேன். இப்போது இதனைக் கூறுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது என்றார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.


