முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      இந்தியா
Rangasamy 2022-08-09

Source: provided

சென்னை : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். 

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்கு பிறகு, திடீரென திங்கள்கிழமை இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள புதுச்சேரி இல்லத்தில் தங்கியிருந்த அவர் நேற்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். புதுவை மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், நிகழாண்டு பட்ஜெட்டுகான நிதி ஒப்புதல், கூடுதல் நிதி கோருதல் உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரிகிறது. 

முன்னதாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் அவர் நேற்று மாலை புதுச்சேரி திரும்பினார். இந்த சந்திப்பினால் புதுவை அரசுக்கு மத்திய அரசின் நிதி உதவி கிடைப்பதுடன், என்.ஆர் காங்கிரஸ்-பாஜக இடையே அதிருப்தி விலகி இணக்கமான சூழல் ஏற்படும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி வட்டாரத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து