முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஜெயகுமார் கோரிக்கை

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      அரசியல்
Jayakumar 2022-08-15

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மக்களை காக்கும் அறப்போரில் அறம் காத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். தி.மு.க. அரசும், அதன் அமைச்சர்களும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும். மக்களுக்கான ஆட்சியாக நடத்துவதே, இவர்கள் மக்களுக்கு செய்யும் உதவியாகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து