முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
2022-08-18

Source: provided

ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 92 நாடுகளில் பரவியிருக்கும் குரங்கு அம்மையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7,500 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகமாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பாதிப்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலேயே பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், குரங்கு அம்மை தீநுண்மி தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவன மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிரக்யா யாதவ் கூறியதாவது, மத்திய ஆப்பிரிக்கா (காங்கோ பேசின்), மேற்கு ஆப்பிரிக்கா மரபணு தொகுப்புகளை கொண்டது குரங்கு அம்மை தீநுண்மி. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையாகும். 

இது காங்கோ பேசின் வகையைவிட குறைந்த பாதிப்பு கொண்டது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையைச் சோ்ந்தது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து