முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலான் கோஸ்வாமிக்கு அளிக்கப்பட்ட கெளரவம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      விளையாட்டு
Jhulan-Goswami 2022--09-24

Source: provided

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி. 2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருடன் ஜுலான் கோஸ்வாமியும் கலந்துகொண்டார். இந்திய அணியின் சார்பாக ஜுலான் தான் முன்னிறுத்தப்பட்டார். அவர் தான் தொகுப்பாளரிடம் பேசினார். அந்தத் தருணத்தில் ஜுலான் கோஸ்வாமிக்கு உரிய மரியாதையை வழங்கினார் ஹர்மன்ப்ரீத். மேலும் இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த அனைவரும் கையெழுத்திட்ட சட்டை ஒன்று, ஜுலானுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்காக 16,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

______________

ரோகித் ஆட்டம் அற்புதம்: தினேஷ் கார்த்திக் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது.,  ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சை அவர் எதிர் கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய வீரர் என்பதை அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது.

வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை. எனக்கு 2 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்துகளில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

_____________

எங்கள் தோல்விக்கு காரணம் அக்சர் படேல்- ஆரோன் பிஞ்ச்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில்., நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.

அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.

_____________

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதியில் 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட் நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங்லியுடன் மோதுகிறார். சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.

_____________

ஹாக்கி இந்தியாவின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு

ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போலா நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து