முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியன்று ஓடும் காரில் பட்டாசு வெடித்த 3 பேர் கைது

சனிக்கிழமை, 29 அக்டோபர் 2022      இந்தியா
Car 2022-10-29

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் தீபாவளியன்று ஓடும் காரில் பட்டாசுவெடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தீபாவளி திருநாள் கடந்த 24-ம் தேதி கொண்டப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இளைஞர்கள் சிலர் ஸ்கார்பியோ காரின் முன் பக்கம் அமர்ந்து கொண்டும், காரின் மேற்புறத்தில் வான வெடிகளை வைத்து வேடிக்கை காட்டி வலம் வந்தனர்.

இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது.  அதனை ஆதாரமாக கொண்டு 8 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடுரோட்டில் தோப்புக்கரணம் போட வைத்த வீடியோ அண்மையில் வைரலானது.

இந்நிலையில் அதே போன்ற மற்றொரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. குருகிராம் நகரில் காரின் பின்புறம் பட்டாசுகளை வெடித்து, தீப்பொறிகளை பறக்க விட்டு பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் காரில் பட்டாசு வெடித்தப்படி அவர்கள் சென்ற காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து