இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
அனைவரையும் திறனாளிகளாக மாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு சிரமம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள்.
முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் முடங்கி விடக்கூடிய காலம் இருந்தது. ஆனால் இப்போது அதைத் தாண்டி, பொதுவெளியில் போராடி முன்னுக்கு வரத் தொடங்கி விட்டார்கள். ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டினுடைய மனித வளத்தைப் பொறுத்தே அமையும். சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் இவ்வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கிறது. எனவேதான், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து வேலை வாய்ப்புகளை வழங்க, வல்லுநர் குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் சிறப்பாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கூடங்களில் பிறரை சாராமல் வேலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குச் சென்று பணி செய்ய வேண்டிய தேவை இல்லை. இல்லத்திலிருந்தே பணி செய்யலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கப் போகிறோம். அதற்குச் சான்றாகத்தான் நான் முதல்வன் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி, மென்பொருளுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய புதிய முயற்சியும் இங்கே அரங்கேற்றப்பட்டு உள்ளது.
வருவாய்த் துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு 263 கோடியே 58 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 12 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 9 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 12 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.
-
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலப் பணிகள் 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு
01 Apr 2023கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கும் பணி ஜனவரி 2024-ல் நிறைவு பெறும் என
-
இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்த வைக்கம் போராட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Apr 2023திருவனந்தபுரம் : வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் என்றும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்றும் முதல்வர்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் : மத்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
01 Apr 2023புதுடெல்லி : இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : சென்னையில் வரும் 7-ம் தேதி அ.தி.மு.க.
-
புதிய நிதி ஆண்டில் அமலானது: சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் : வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்
01 Apr 2023சென்னை : சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தன. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
-
3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி: 16 ஏக்கரில் மதுரையில் அமைகிறது பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழக பொதுப்பணித்துறை தகவல்
01 Apr 2023மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பி
-
பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் நாளை அ.தி.மு.க, சார்பில் அஞ்சலி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை 3-ம் தேதி அ.தி.மு.க.
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
2022-23-ல் அரசுப் பணிகளுக்கான இணையவழித் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் 11.4 லட்சம்
01 Apr 2023சென்னை : 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியு
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.