இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பெயர் 30-ம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கூட்டணி கட்சியான த.மா.கா.வும் கலந்து கொண்டது.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மதியம் 2.30 வரை நடைபெற்றது. பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 6.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தும், சின்னம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் முதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ளதால் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 111 பேர் கொண்ட தேர்தல் பணி குழு மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.தி.முக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சின்னம் தொடர்பான தீர்ப்புக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கு பாடுபடுவோம் என்பதே எங்களது இலக்கு. எனவே வரும் 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 20 sec ago |
கீரை ஆம்லெட்![]() 3 days 23 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக யுவராஜ் டுவீட்
25 Mar 2023அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 124 பேரின் பட்டியல் வெளியீடு
25 Mar 2023பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்கட்ட வேட்பாளர்கள்
-
100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்: புடினிடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வீடியோ வைரல்
25 Mar 2023மாஸ்கோ : 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், புடினிடம் கூறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மாநில மொழிகளில் ஐகோர்ட் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
25 Mar 2023சென்னை : ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
-
சென்னை, மும்பை. கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் : தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
25 Mar 2023மதுரை : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.
-
முதுநிலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று துவக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
25 Mar 2023சென்னை : எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
25 Mar 2023சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
25 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு : முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
25 Mar 2023சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
-
தமிழகத்தில் நீதியின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் : அமைச்சர் ரகுபதி பெருமித பேச்சு
25 Mar 2023மதுரை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
தேசிய பங்கு சந்தையில் இணைந்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
25 Mar 2023திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளே இந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகியுள்ளத -
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேச்சு
25 Mar 2023மதுரை : தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
-
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
25 Mar 2023வாஷிங்டன் : குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக இந்தியருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
-
166 கோடி ரூபாயில் மதுரை கோர்டுக்கு கூடுதல் கட்டிடங்கள் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடிக்கல்
25 Mar 2023மதுரை : ரூ.166 கோடியில் மதுரை கோர்டுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடங்களுங்கான அடிக்கல்லை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று நாட்டினார்.
-
36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
25 Mar 2023சென்னை : 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
-
ராகுல் தகுதி நீக்கம்: மாநிலம் முழுவதும் நாளை முதல் போராட்டம் நடத்த காங். திட்டம்: கே.எஸ்.அழகிரி
25 Mar 2023சென்னை : ராகுலின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து மத்திய பா.ஜ.க.
-
மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை
25 Mar 2023சென்னை : மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி
25 Mar 2023கடலூர் : என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தமிழகத்தின் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
25 Mar 2023சென்னை : தமிழகத்தின் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் : சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல்
25 Mar 2023நியூயார்க் : இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் காலமானார்.
-
இண்டிகோ விமானத்தில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் தம்பதியருக்கு பாராட்டு
25 Mar 2023கோவை : ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களாக அறியப்படும் பொம்மன், பெள்ளி தம்பதியர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர்.
-
ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் ஊழியர் ஒருவர் தற்கொலை
25 Mar 2023திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
13-வது உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் போரா, நிது தங்கம் வென்று சாதனை
25 Mar 2023டெல்லி : சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா மற்றும் நிதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
-
தொடர்ந்து கேள்வி கேட்பேன்: ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் : டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
25 Mar 2023புதுடெல்லி : அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் தினசரி பாதிப்பு உயர்வு: கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
25 Mar 2023புதுடெல்லி : நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் மூலம் அற