முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
India-Corona 2023-01-08

Source: provided

புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 93 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்தது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 108 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 57 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,842 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் குஜராத்தில் நேற்று முன்தினம் ஒருவர் இறந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,740 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து