முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நீதியின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் : அமைச்சர் ரகுபதி பெருமித பேச்சு

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
Raghupathi-2022-12-01

Source: provided

மதுரை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ. 166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:- 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். 

நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது. அவரது நம்பிக்கை வார்த்தைகள், நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து