முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலக கட்டிடத்தின் மாடியில் தீ விபத்து

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
CBCID

சென்னை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள மாடியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் நான்கு மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல்  அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது அலுவலக கட்டிடத்தின் மாடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. 

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்து வேகமாக வெளியேறினர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் கட்டிடத்தில் இருந்த காவல் துறையினர் அலுவலக மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். 

மொட்டை மாடியில் இருந்த ஏ.சி. சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்தில் எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லையென முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து