எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனட்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் அந்த 3 தொழிலாளிகளும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தொழிலாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்களான அப்துல் ரகுமான் (வயது 25), நசீர் உசேன்(30), உஸ்மான் (40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மண்சரிந்து தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அருவங்காடு போலீசார், ஒப்பந்ததாரர் மார்ட்டின் மற்றும் இடத்தின் உரிமையாளர் முத்து கிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


