Idhayam Matrimony

நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      தமிழகம்
Suicide 2023 04 29

நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனட்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் அந்த 3 தொழிலாளிகளும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தொழிலாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மண் சரிவில் சிக்கிய கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்களான அப்துல் ரகுமான் (வயது 25), நசீர் உசேன்(30), உஸ்மான் (40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மண்சரிந்து தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அருவங்காடு போலீசார், ஒப்பந்ததாரர் மார்ட்டின் மற்றும் இடத்தின் உரிமையாளர் முத்து கிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து