முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு கவர்னர் ரவி இன்று துவக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
RN Ravi 2023-04-06

Source: provided

ஊட்டி  :  உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் பல்கலைக் கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் தமிழில் கற்பித்தல் - கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில், பல்கலைக் கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ்குமார் ஆன்லைன் மூலம் துணைவேந்தர்களிடம் உரையாற்றுகிறார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றி, துணைவேந்தர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து