முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயிதே மில்லத்தின் 128-வது பிறந்த நாள்: சென்னையில் உள்ள நினைவிடத்தில் இன்று ஜே.சி.டி. பிரபாகர் மரியாதை செலுத்துகிறார் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2023      தமிழகம்
OPS-1 2023 04 24

Source: provided

சென்னை : காயிதே மில்லத்தின் 128-வது பிறந்த  நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா பெரிய மசூதி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார். நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள  வேண்டும் என்று முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலை  போராட்ட வீரரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை வகித்தவரும், கட்சி வித்தியாசமின்றி அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புறவு கொண்டவரும், இஸ்லாமிய சமுதாயத்தின் முதுபெரும் தலைவருமான கண்ணியத்துக்குரிய காயிதே  மில்லத் முகமது  இஸ்மாயில் சாஹிப்பின் 128-வது பிறந்த நாளான இன்று 5-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வாலாஜா பெரிய மசூதி வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியத்துக்குரிய  காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.
மேற்படி நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து