முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட சொகுசு கப்பல் : 2024 துவக்கத்தில் பயன்பாட்டிற்கு வருகிறது

புதன்கிழமை, 7 ஜூன் 2023      உலகம்
China-ship 2023 06 07

Source: provided

பெய்ஜிங் : சீனாவில்  தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட அடோரா மாஜிக் சிட்டி எனும் சொகுசு கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடோரா மாஜிக் சிட்டி என்ற பெயரில் சீனாவில் மிக பெரிய பயண சொகுசு கப்பல் தயாரிக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கப்பல் மோர் டூ என்றும் அழைக்கப்படுகிறது. 

5 ஆண்டுகள் கட்டுமானம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் ஷாங்காய் நகரில் கப்பல் கட்டும் இடத்தில் இருந்து சொகுசு கப்பலானது வெளியேறியது. கடைசி கட்ட சோதனைகள் முடிந்து இந்த அடோரா மாஜிக் சிட்டி சொகுசு கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சொகுசு கப்பலில் 2,125 அறைகள் உள்ளன. அவற்றில் ஒரே நேரத்தில் 5,246 பேர் தங்க முடியும் இது சீனாவின் கப்பல் தயாரிக்கும் பணியில் ஒரு மையில்கல்லாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து