முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: தமிழக சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை எடுத்து வந்ததற்காக, பேரவை உரிமை மீறல் குழு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பேரவை செயலாளர், உரிமைக் குழு தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்குமாறு வலியுறுத்த விரும்பவில்லை  என்று பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு தரப்பில் கூறப்பட்டதால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து