முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தொடர்பான ஒ.பி.எஸ் அப்பீல் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை:அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு மனுவை இன்று சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் ஓபிஎஸ் தரப்பு வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நேற்று ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

 

அதில் கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது; கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது; உட்சபட்ச அதிகாரம் பெற்றது பொதுக்குழுதான். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என வழக்கறிஞர் வாதிட்டார். நேற்றைய வாதம் முடிந்த நிலையில், மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து