எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மழைக்கால வியாதிகளான டெங்கு, வயிற்றுபோக்கு, டைபாய்டு பரவாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை உள்ளாட்சி துறைகள் இணைந்து கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்டறியும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை ஆகிய பணிகளை செய்து வருகிறார்கள்.
2972 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சல் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. 23 ஆயிரத்து 713 பணியாளர்கள் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருந்துகள், ரத்தம் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவங்களான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலை சாறு ஆகியவையும் வழங்கப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் 4227 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது கடந்த ஆண்டுகளை விட குறைவுதான்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |