எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தூத்துக்குடி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.
பாதிக்கப்படும்போது மட்டும் வந்து பார்த்து விட்டு செல்பவர்கள் இல்லை நாங்கள். இறுதி வரைக்கும் உங்களுடன் இருந்து துயரங்களை துடைப்பதின் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 343 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டு வருகிறது.
இதுவரை உழவர்களுக்கு பயிர்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், சிறு வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வணிகக் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகக் கடன், முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகர் கடன், பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு, பயிர் சேதங்களுக்கு நிவாரணம், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம், சேதமடைந்த மீன்பிடி விசைப் படகுகள், நாட்டு படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு நிவாரணத் தொகை என பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு 666 கோடியே 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவையும் வழங்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருக்கின்ற சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கும் பொருட்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடன் வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்தபடி, 6 விழுக்காடு சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில், இந்த இரண்டு மாவட்டத்திலும், 670 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 18 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால், இந்த மாவட்டங்களைச் சார்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில் செய்வோர் பயனடைந்து இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதுதான் முக்கியம். மத்திய அரசு ஒரூ ரூபாய்கூட கொடுக்காதபோதும், இது யார் கொடுத்தது என்றால், இந்த ஸ்டாலின் உங்களுக்காக கொடுத்தது. இந்த அரசு உங்களுக்காக கொடுத்தது.
இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகள் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம் அமைக்கப்படும்.இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அம்பாசமுத்திரத்துக்கு புதிய மருத்துவமனை கட்டிடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது. விரைவில் இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது எல்லாமே தமிழ்நாடு அரசின் மாநில நிதியில் இருந்து செய்து தரப்படுகிறது.
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை, தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழக மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்.
நாம் இதை கேட்டால் என்ன சொல்கிறார்கள்? 'உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல. எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். என்ன காரணம்? எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துத்தானே வருகிறார்கள்.
தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்தானே?மத்திய பா.ஜ.க. அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் தி.மு.க.வின் ஆட்சி. உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சிதான். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
சூர்யவன்ஷி புதிய சாதனை
03 Jul 202519 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது: இலங்கை அமைச்சர் அதிரடி
03 Jul 2025இலங்கை: தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணம்: பா.ஜ.க.வினருக்கு அழைப்பு
03 Jul 2025சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
-
கானா பயணத்தை முடித்துக் கொண்டு டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
03 Jul 2025ஆக்கரா: கானா பயணம் முடிந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
மிக சுவையான உணவு கிடைக்கும் 100 இடங்களில் 6 இந்திய நகரங்கள்
03 Jul 2025புதுடில்லி: சுவை மிகுந்த உணவு கிடைக்கும் உலகின் டாப் 100 நகரங்களில், 6 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
-
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: திருச்சியை வீழ்த்தியது திண்டுக்கல்
03 Jul 2025நத்தம்: டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
03 Jul 2025நார்த்தம்டான்: வைபவ் சூர்யவன்ஷி அபார ஆட்டத்தால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
-
பணமோசடி புகார்: நிகிதா மீதான வழக்குகளை உடனே விசாரிக்க கோரி மனு
03 Jul 2025மதுரை: திருப்புவனம் இளைஞர் அஜீத்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்க கோரி திருமங்கலம் தாலுகா காவல் ந
-
பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிக்கிறது: ரவி சாஸ்திரி விமர்சனம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
-
3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் திணறும் இந்திய அணி
03 Jul 2025பர்மிங்ஹாம்: புஜாராவுக்கு பிறகு 3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது.
மோசமான தோல்வி...
-
கானாவின் வளர்ச்சி பயணத்தில் சக பயணியாக இந்தியா உள்ளது பிரதமர் மோடி பெருமிதம்
03 Jul 2025அக்ரா: கானாவின் வளர்ச்சி பாதையில் இந்தியா கூட்டாளியாக இல்லை. சக பயணியாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.