முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிதாவின் கோர்ட் காவல் 23-ம் தேதி வரை நீட்டிப்பு : டெல்லி நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடெல்லி : பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர்  சந்திரசேகரராவின் மகள் கவிதா கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டார்.  கைதைத் தொடர்ந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  திஹார் சிறையில் இருக்கும் கவிதாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தது.  நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கடந்த ஏப். 11 ஆம் தேதி சிறையில் இருந்த கவிதாவை சிபிஐ கைது செய்தது.  இந்நிலையில் நேற்றுடன் கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  விசாரணையின் போது,  அமலாக்கதுறை தரப்பில் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.  ஆனால் இதனையேற்க மறுத்த நீதிமன்றம் ஏப். 23 ஆம் தேதி வரை கவிதாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து