முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐ.எம்.எப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

சனிக்கிழமை, 25 மே 2024      உலகம்
IMF 2024-05-25

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுக்கு நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது.

சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து (ஐ.எம்.எப்) பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக, 6 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.எம்.எப் மற்றும் பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிதி உதவியை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து