எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின் காஸானில் கடந்த 12-ஆம் தேதி பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், அதில் 90 நாடுகளை சேர்ந்த 47க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ரஷியாவில் நடைபெறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிர் குழுவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம், தற்போது ஒரேயொரு பதக்கம் மட்டுமே வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 21-வது இடத்தில் உள்ளது. பதக்கப்பட்டியலில் 42 தங்கம், 26 வெள்ளி, 15 வெண்கலத்துடன் ரஷியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் 2-வது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும் உள்ளன. டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
________________________________________________________________
கோலி மீது துபே நம்பிக்கை
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று இன்னிங்ஸ் ஆடி 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் துபே. இந்நிலையில், வரும் போட்டியில் கோலி ரன் குவிப்பார் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்து வருகிறார் விராட் கோலி.
உலகக் கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள அவர், முறையே 1, 4 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 741 ரன்களை குவித்திருந்தார். அப்படி இருக்கும் நிலையில் அவரா இது என்ற கேள்வி அவரது ஆட்டத்தை பார்க்கும் போது எழவே செய்கிறது. “கோலி குறித்து பேச நான் யார்? அவர் முதல் மூன்று போட்டிகளில் ரன் எடுக்கவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் அவர் மூன்று சதங்கள் விளாசலாம். அப்போது இந்த விவாதங்கள் எழாது” என துபே தெரிவித்துள்ளார்.
____________________________________________________________________
டோனிக்கு கனடா வீரர் புகழாரம்
கனடா அணி வீரர் ஆரோன் ஜான்சன் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர். இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர் 1996-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 2011-ம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடும்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்தில் 52 ரன்கள் விளாசினார்.
____________________________________________________
சிக்கலில் பாக். வீரர்கள்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- அமெரிக்கா இடையிலான போட்டி "டை"யில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில தலைவர்கள், முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஹ்சின் நக்வி-க்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வி தோல்விக்காக கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், வீரர்கள் அவர்களுக்கான மத்திய ஒப்பந்த மறுஆய்வு, சம்பளம், போட்டிக்கான கட்டணம் குறைவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.