எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, ரயில் விபத்துக்கு காரணமான சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்துக்கு ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரது கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த ரங்கபாணி ரயில் நிலையத்துக்கும் சத்தா் ஹட் ரயில்வே சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சிக்னல் திங்கள்கிழமை(ஜூன் 17) அதிகாலை 5.50 மணி முதல் செயல்படாமல் இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தானியங்கி சிக்னல் செயல்படாததால் ரங்கபாணி ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 17 அதிகாலை 2.27 மணிக்கு புறப்பட்ட கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில், ரங்கபாணி - சத்தா் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு ரயில் நிலையங்களுக்குமிடையேயான தூரம் 14 கி.மீ. மட்டுமே. இடைப்பட்ட ரயில் நிறுத்தமாக, நிஜ்பாரி ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையே அதிகாலை 5.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்ட போதிலும், ரயில்வே தொலைத்தொடர்புத்துறையால் உடனடியாக சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கும் ரயில் விபத்துக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில், சிக்னல் எல்லைக்குட்பட்ட பகுதியை கடக்கும் முன்பே, பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடந்து செல்வதற்கான எழுத்துபூா்வ (டிஏ 912) அனுமதியை ரங்கபாணி ரயில்நிலைய அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது தெரியவில்லை.
இதன் காரணமாகவே, சரக்கு ரயில் ஓட்டுநா் சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் ரயிலை தொடா்ந்து இயக்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா - சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு(கவச்) தொழில்நுட்பத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் நிறுவப்படவில்லை.
தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. ஆகவே, ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையேயான அனைத்து சிக்னலையும் கடக்க மேற்கண்ட இரு ரயில்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று, இதே பாணியில் அந்த சிக்னலை 7 ரயில்கள் கடந்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வேறு விபத்துகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சிக்னல் செயல்படாதபோது ஒவ்வொரு சிக்னலிலும் ரயிலை ஒரு நிமிஷம் நிறுத்திதான் ஓட்டுநா் இயக்க வேண்டும். ஆனால், சரக்குரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாரா? அந்த ரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்பட்டது? என்பவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், எப்போது வேண்டுமானலும் ரயிலை நிறுத்தும் வகையில் குறைந்த வேகத்தில் சரக்கு ரயிலை இயக்கியிருக்க வேண்டும். மணிக்கு 15 கி.மீ. வேகம் என்ற வேகக்கட்டுப்பாட்டை சரக்குரயில் ஓட்டுநர் மீறியிருப்பதும், பாதுகாப்பு விதிகளை அவர் முறையாகப் பின்பற்றவில்லை என்பதும் சரக்குரயில் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரைச் சுற்றியே இந்த விபத்துக்கான முதற்கட்ட விசாரணை நடைபெறுகிறது. முழுமையான விசாரணை முடிவிலே விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.
இதனிடையே, கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், இந்த கோர விபத்து தொடர்பாக பக்திநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சரக்குரயில் ஓட்டுநர், துணை ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


