எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, ரயில் விபத்துக்கு காரணமான சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்துக்கு ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரது கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த ரங்கபாணி ரயில் நிலையத்துக்கும் சத்தா் ஹட் ரயில்வே சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சிக்னல் திங்கள்கிழமை(ஜூன் 17) அதிகாலை 5.50 மணி முதல் செயல்படாமல் இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தானியங்கி சிக்னல் செயல்படாததால் ரங்கபாணி ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 17 அதிகாலை 2.27 மணிக்கு புறப்பட்ட கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில், ரங்கபாணி - சத்தா் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு ரயில் நிலையங்களுக்குமிடையேயான தூரம் 14 கி.மீ. மட்டுமே. இடைப்பட்ட ரயில் நிறுத்தமாக, நிஜ்பாரி ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையே அதிகாலை 5.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்ட போதிலும், ரயில்வே தொலைத்தொடர்புத்துறையால் உடனடியாக சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கும் ரயில் விபத்துக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில், சிக்னல் எல்லைக்குட்பட்ட பகுதியை கடக்கும் முன்பே, பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடந்து செல்வதற்கான எழுத்துபூா்வ (டிஏ 912) அனுமதியை ரங்கபாணி ரயில்நிலைய அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது தெரியவில்லை.
இதன் காரணமாகவே, சரக்கு ரயில் ஓட்டுநா் சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் ரயிலை தொடா்ந்து இயக்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா - சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு(கவச்) தொழில்நுட்பத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் நிறுவப்படவில்லை.
தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. ஆகவே, ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையேயான அனைத்து சிக்னலையும் கடக்க மேற்கண்ட இரு ரயில்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று, இதே பாணியில் அந்த சிக்னலை 7 ரயில்கள் கடந்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வேறு விபத்துகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சிக்னல் செயல்படாதபோது ஒவ்வொரு சிக்னலிலும் ரயிலை ஒரு நிமிஷம் நிறுத்திதான் ஓட்டுநா் இயக்க வேண்டும். ஆனால், சரக்குரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாரா? அந்த ரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்பட்டது? என்பவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், எப்போது வேண்டுமானலும் ரயிலை நிறுத்தும் வகையில் குறைந்த வேகத்தில் சரக்கு ரயிலை இயக்கியிருக்க வேண்டும். மணிக்கு 15 கி.மீ. வேகம் என்ற வேகக்கட்டுப்பாட்டை சரக்குரயில் ஓட்டுநர் மீறியிருப்பதும், பாதுகாப்பு விதிகளை அவர் முறையாகப் பின்பற்றவில்லை என்பதும் சரக்குரயில் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரைச் சுற்றியே இந்த விபத்துக்கான முதற்கட்ட விசாரணை நடைபெறுகிறது. முழுமையான விசாரணை முடிவிலே விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.
இதனிடையே, கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், இந்த கோர விபத்து தொடர்பாக பக்திநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சரக்குரயில் ஓட்டுநர், துணை ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்க விலை
16 Sep 2025சென்னை : மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் கனமழை
16 Sep 2025சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை பெய்ததால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
-
ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்றினார் த.வெ.க. தலைவர்.
16 Sep 2025சென்னை : சுற்றுப்பயண திட்டத்தை த.வெ.க. தலைவர் விஜய் மாற்றி அமைத்துள்ளார்.