எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, ரயில் விபத்துக்கு காரணமான சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்த விசாரணை நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்துக்கு ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரது கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த ரங்கபாணி ரயில் நிலையத்துக்கும் சத்தா் ஹட் ரயில்வே சந்திப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சிக்னல் திங்கள்கிழமை(ஜூன் 17) அதிகாலை 5.50 மணி முதல் செயல்படாமல் இருந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தானியங்கி சிக்னல் செயல்படாததால் ரங்கபாணி ரயில் நிலையத்திலிருந்து ஜூன் 17 அதிகாலை 2.27 மணிக்கு புறப்பட்ட கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில், ரங்கபாணி - சத்தா் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு ரயில் நிலையங்களுக்குமிடையேயான தூரம் 14 கி.மீ. மட்டுமே. இடைப்பட்ட ரயில் நிறுத்தமாக, நிஜ்பாரி ரயில் நிலையம் அமைந்துள்ளது.
ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையே அதிகாலை 5.50 மணிக்கு சிக்னல் கோளாறு ஏற்பட்ட போதிலும், ரயில்வே தொலைத்தொடர்புத்துறையால் உடனடியாக சிக்னல் கோளாறு சரிசெய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கும் ரயில் விபத்துக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில், சிக்னல் எல்லைக்குட்பட்ட பகுதியை கடக்கும் முன்பே, பயணிகள் ரயிலுக்கு பின்னால் வந்த சரக்கு ரயில் அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடந்து செல்வதற்கான எழுத்துபூா்வ (டிஏ 912) அனுமதியை ரங்கபாணி ரயில்நிலைய அதிகாரி வழங்கியிருப்பது ரயில்வே ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஏன்? என்பது தெரியவில்லை.
இதன் காரணமாகவே, சரக்கு ரயில் ஓட்டுநா் சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் ரயிலை தொடா்ந்து இயக்கியுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்து நிகழ்ந்த அகா்தலா - சீல்டா ரயில் வழித் தடத்தில் தானியங்கி ரயில் விபத்து தடுப்பு(கவச்) தொழில்நுட்பத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் நிறுவப்படவில்லை.
தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. ஆகவே, ரங்கபாணி - சத்தர் ஹட் நிலையங்களுக்கிடையேயான அனைத்து சிக்னலையும் கடக்க மேற்கண்ட இரு ரயில்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று, இதே பாணியில் அந்த சிக்னலை 7 ரயில்கள் கடந்து சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வேறு விபத்துகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சிக்னல் செயல்படாதபோது ஒவ்வொரு சிக்னலிலும் ரயிலை ஒரு நிமிஷம் நிறுத்திதான் ஓட்டுநா் இயக்க வேண்டும். ஆனால், சரக்குரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தினாரா? அந்த ரயில் எவ்வளவு வேகத்தில் இயக்கப்பட்டது? என்பவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எனினும், எப்போது வேண்டுமானலும் ரயிலை நிறுத்தும் வகையில் குறைந்த வேகத்தில் சரக்கு ரயிலை இயக்கியிருக்க வேண்டும். மணிக்கு 15 கி.மீ. வேகம் என்ற வேகக்கட்டுப்பாட்டை சரக்குரயில் ஓட்டுநர் மீறியிருப்பதும், பாதுகாப்பு விதிகளை அவர் முறையாகப் பின்பற்றவில்லை என்பதும் சரக்குரயில் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ரங்கபாணி ரயில் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் ஓட்டுநர் ஆகிய இருவரைச் சுற்றியே இந்த விபத்துக்கான முதற்கட்ட விசாரணை நடைபெறுகிறது. முழுமையான விசாரணை முடிவிலே விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.
இதனிடையே, கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர், இந்த கோர விபத்து தொடர்பாக பக்திநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சரக்குரயில் ஓட்டுநர், துணை ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற