எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரியை ஆளும் கூட்டணி அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெறுவதில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த மட்டில் 4 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ள நிலையில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு வழங்கி வந்த அரசின் இடஒதுக்கீட்டை முழுமையாக மறுத்து, அரசுக்கு ஒரு இடம் கூட வழங்கப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது இயங்கி வரும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 650 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணைப்படி குறைந்தது 50 சதவீத இடங்களை அரசின் இடஒதுக்கீடாக அரசு பெற வேண்டும்.
புதுச்சேரியில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசும், தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசும், ஆண்டுதோறும் மனம்போன போக்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கும் குறைந்த இடங்களை மட்டுமே அரசின் இடஒதுக்கீடாக பெற்று, ஆண்டுதோறும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளர்கள் பயன்பெறும் விதத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன்மூலம் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயிலும் பொன்னான வாய்ப்பினைப் பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திலும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, மாநில அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, புதுச்சேரி அரசானது இச்சட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி, உள் இடஒதுக்கீடு பெறக்கூடிய மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது. 12 ஆண்டுகள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் இச்சட்டத்தின் பயன்கிடைக்கும் சூழ்நிலை உள்ளதால், இச்சட்டத்தின் மூலம் 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களால் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரியை ஆளும் கூட்டணி அரசைக் கண்டித்தும் இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும் தமிழகம் போன்று, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியின் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், இன்று காலை 10 மணியளவில், பழைய பஸ் நிலையம், பேரறிஞர் அண்ணாசிலை அருகில், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில அரசை கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
கேரள முன்னாள் அமைச்சர் காலமானார்: பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Nov 2025திருவனந்தபுரம் : கேரள முன்னாள் அமைச்சர் காலமானதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 12-ம் கனமழை: வானிலை ஆய்வு மையம்
08 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
மும்பை-லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
08 Nov 2025மும்பை : மும்பை - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளில் குளறுபடி அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
08 Nov 2025புதுச்சேரி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 69 ஆயிரம் பேர் பலி
08 Nov 2025காசா சிட்டி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு
08 Nov 2025பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


