எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தனர் என்று காத்மாண்டு காவல்துறை தெரிவித்தனர்.
பைதடி மாவட்டத்தின் புர்சௌடி நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருமணக் குழுவினரை ஏற்றிச்செல்லும்போது, வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பெண் உள்பட இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்ததாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஆயுதக் காவல் படையின் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். உள்ளூர் மக்கள், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதக் காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


