எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : கூட்டுறவு தேர்தலை ஏன் தி.மு.க. அரசால் நடத்த முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறியதாவது-
தமிழகத்தில் 33, 377 ரேஷன் கடையில் உள்ளது கூட்டுத்துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கடந்த பத்தாண்டில் இருந்தது. இந்தியாவிலே எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் மாதம்தோறும் 20 கிலோ அரிசி என்ற திட்டத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு அம்மா தொடங்கி வைத்தார்கள் நம்மை காட்டிலும் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கூட இது போன்ற திட்டங்கள் கிடையாது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு மானியங்களாக வழங்கப்பட்டு வந்தது, அதேபோல் ரேஷன் கடைகளில் மக்களின் தேவைக்கேற்ப பணியாளர்கள் அமர்த்தபட்டனர்.மேலும் பொங்கல் பண்டிகையில் விலையில்லா வேட்டி, சேலை திட்டமும் ,பொங்கல் பரிசு திட்டமும் சிறப்பாக அம்மா ஆட்சிக்கால சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகளும் சிறப்பாக வழங்கப்பட்டது அதேபோல் மாற்றுத்திறன்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் தேசிய அளவில் கூட்டுறவு துறை விருது பெற்றது.கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28 விருதை கூட்டுத் துறை பெற்றுள்ளது இதில் இரண்டு முறை ஜனாதிபதி விருதை பெற்றது.
மக்களின் கோரிக்கையை ஏற்று எடப்பாடியார் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் , 20 ரேஷன் கார்டு ,30 ரேஷன் கார்டு உள்ள மலை கிராமம் மற்றும் குக்கிராம பகுதிகளில் அந்தப் பகுதி மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கிட 3501 நகரும் நியாயவிலை கடைகளை செயல்படுத்தப்படும் என்று அறிவித்து, 2020 ஆம் ஆண்டு எடப்பாடியார் திறந்து வைத்தார் இதற்காக 9 கோடி 66 லட்சம் நிதியை வழங்கினார்.தற்போது நகரும் நியாய கடை உள்ளதா? இல்லை அம்மா மினி கிளிக்கை மூடியதை போல மூடு விழா நடத்தி விட்டார்களா?. அம்மா ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் இரண்டு முறை கூட்டுறவு தேர்தல் ஜனநாயகம் முறைப்படி நடைபெற்றது, தற்போது கூட்டுறவு தேர்தலை விடியா திமுக அரசு ஏன் நடத்தவில்லை? தற்போது தனி அதிகாரிகளை வைத்து தான் நிர்வாகம் நடைபெறுகிறது.அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டன. தற்போது கடன் வழங்கப்பட்டு வருகிறது அதற்காக மானியங்களை வங்கிகளுக்கு அரசு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில் இந்த மூன்றாண்டுகளில் கூட்டுறவு துறை சிக்கி சீரழிந்து வருகிறது, விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் கூட கடந்த மூன்று ஆண்டுகளாக சரியாக வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகிறார்கள், அதே போல் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய புளி, மண்டவெல்லம் ஆகியவை எல்லாம் தரக்குறைவாக இருந்தது அதில் கூட 500 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.கடந்த கூட பொங்கல் பண்டிகையில் மக்களுக்கு கரும்பை கூட வழங்காமல் இரக்கமற்ற அரசாக இருந்தது அதைக் கூட எடப்பாடியார் கடுமையாக கண்டன குரல் கொடுத்த பின்பு தான் கூட்டுறவு துறை மூலம் கரும்பு வழங்கப்பட்டது.
ரேஷன் கடையில் மூலம் ஒரு கிலோ பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாமாயில் ரூ 25 க்கு வழங்கப்பட்டு வருகிறது, இதனை ஒரு கோடியே 90 லட்சம் குடும்பங்கள் வாங்கி பயன்பெற்றனர், இதே வெளிச்சந்தையில் ஒரு 1 பருப்பு 185க்கும்,பாமாயில் 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதற்காக ஆண்டுதோறும் 3,800 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்ஆகியவை வழங்கப்படவில்லை, இது குறித்து எடப்பாடியார் விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டு இதற்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார் ஆனாலும் விடியா அரசு இன்னும் இதை சரி செய்யவில்லை. அதேபோல் ரேஷன் கடைகளுக்கு வாடகை ,மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியமாக வழங்கும், இந்த மானியத்தால் தான் சமாளிக்க முடியும் ஆனால் இந்த மானியங்கள் குறித்த காலத்தில் வரவில்லை இதனால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகின்றன.
ஆண்டுதோறும் ரேஷன் கடை செலவுக்காக கூட்டுறவு துறைக்கு 450 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கும். ஆனால் கடந்த 2021-2022 ஆண்டு மானியத்தில் 3 சதவீதமும், 2022-2023 ஆண்டு மானியத்தில் 51 சதவீதமும், 2023-2024 ஆண்டில் 40 சதவீதமும் ஆக மொத்தம் 750 கோடி நிலுவையில் உள்ளது .இதனால் ரேஷன் கடை வாடகை, ஊழியர் சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல் சங்கங்கள் திணறி வருகிறது. இன்றைக்கு அரசு பணத்தில் வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலினும், அரசு பணத்தில் கார்ரேஸ் நடத்திய உதயநிதியும் தங்களின் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்கள். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த கூட்டுறவு துறைக்கு உரிய நிதி வழங்க முன்வர வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக மக்கள் உங்களுக்கு 2026 தேர்தலில் பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள், மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது சீரழிந்திருக்கும் கூட்டுறவுத் துறையை மக்களுக்கு பயன்பெறும் சேவை துறையாக மாற்றுவார் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.