எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கும்பகோணம் : தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்ரவாண்டி வரை உள்ள பிரதானச் சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டாருக்குத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாகக் கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், முதல் பிரிவாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ தூரத்திற்கும்,. 2-ம் பிரிவாக சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம்-சோழபுரம் வரை ரூ.2356.19 கோடியில் 50.480 கி.மீ. நீளத்திலும், 3-ம் பிரிவுகளாகச் சோழபுரம் முதல் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புளியந்தோப்பு வரை ரூ.2374.69 கோடி மதிப்பீட்டில் 47.835 கி.மீ. நீளத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி- சோத்தியாப்தோப்பு வரையிலான சாலைப் பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டதால், மீதமுள்ள சேத்தியாத்தோப்பு முதல் தஞ்சாவூர் வரையிலான 2-ம் மற்றும் 3-ம் கட்டப் சாலைப் பணிகளை, மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கார் மூலம் புறவழிச்சாலையை ஆய்வு மேற்கொண்டவர், மூப்பக்கோயில் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த அதன் வரைபடத்தைப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்–சோழபுரம், சோழபுரம்– சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது.
மொத்த திட்டத்தில் நில கையகப்படுத்துவதில், சிக்கல்கள் மற்றும் முக்கிய சுணக்கமாக இருந்ததால், ஒப்பந்தக்காரர்களால் இந்த சாலைப் பணியை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக, பணியை செய்ய முடியாத எனக் கூறி என்னை சந்தித்தனர். மேலும், சாலை அமைப்பதற்கான கட்டுமான மூல பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது.
தற்போது, தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைப்பதற்காகத் திட்டம் 727 கி.மீ.தூரத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை – சத்தியமங்கலம், தூத்துக்குடி – கன்னியாகுமரி, ராமநாதபுரம் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – அரிச்சல்முனை, மதுரை – ராமேஸ்வரம், மங்களூர் – விழுப்புரம், மதுரை – தொண்டி, சேலம் – வாணியம்பாடி, மதுரை – தேனி உள்பட 10 ஊர்களுக்கு இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 1,343 கி.மீ. தூரத்திற்கு. 68 சாலைத் திட்டங்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில், தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை 4,975 சாலைகள் இருந்தது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ.தூரத்திற்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது எனத்தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.